செய்திகள்
மனிகா பத்ரா

ஒலிம்பிக் தகுதி சுற்று- இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு ஏமாற்றம்

Published On 2020-01-25 05:21 GMT   |   Update On 2020-01-25 05:21 GMT
போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியின் இரு ஆட்டங்களிலும் இந்தியா தோல்லி அடைந்ததன் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு குறைந்து போய் விட்டது.
கோன்டோமர்:

ஒலிம்பிக் போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1-3 என்ற கணக்கில் சுலோவேனியாவிடம் தோல்வி அடைந்தது.

இரட்டையரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு சத்யன், சரத்கமல், ஹர்மீத் தேசாய் வரிசையாக ஒற்றையர் பிரிவில் ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ருமேனியாவிடம் போராடி தோற்றது. இவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கும். தோல்வியின் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு குறைந்து போய் விட்டது.
Tags:    

Similar News