செய்திகள்
ஐபிஎல் 2020

மே 24-ந்தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி: 7.30 மணிக்கு போட்டி தொடங்க வாய்ப்பு

Published On 2020-01-08 14:59 GMT   |   Update On 2020-01-08 14:59 GMT
ஐபிஎல் 2020 சீசனின் இறுதிப் போட்டி மே 24-ந்தேதி நடத்தப்பட இருக்கிறது. போட்டி 8 மணிக்குப் பதிலாக 7.30 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2020 சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு செய்து வருகிறது. போட்டியை எத்தனை நாட்கள் நடத்தலாம், என்னைக்கு தொடங்கலாம், இறுதிப் போட்டியை எப்போது நடத்தலாம் ஆகியவற்றை பற்றி யோசித்து வருகிறது.

மேலும் போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆவதால் போட்டியை முன்கூட்டியே தொடங்கலாமா என்பது குறித்தும் அணி உரிமையாளர்கள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஆலோசிக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் 57 நாட்கள் நடைபெற இருப்பதாகவும், மார்ச் 29-ந்தேதி ஐபிஎல் சீசன் தொடங்க இருப்பதாகவும், மே 24-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டி 7.30 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளதால் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்படாது. அதனால்தான் 45 நாள் தொடரில் இருந்து 57 நாட்களாக நீடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News