செய்திகள்
டாஸ் சுண்டிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அருகில் மலிங்கா

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2020-01-07 13:05 GMT   |   Update On 2020-01-07 13:05 GMT
இந்தூரில் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

தவான், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஷிவம் துபே, 7. பும்ரா, 8. ஷர்துல் தாகூர், 9. நவ்தீப் சைனி, 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர்.
Tags:    

Similar News