செய்திகள்
யோகா: தங்கம் வென்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
கோவாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாவில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
கோவாவில் கடந்த 29-ந்தேதி ஆசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் சாய் ஸ்ரீகார்த்திக் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.
அதேபோல் எட்டு வயத்திற்கு உட்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசந்தான் பாலன் தங்கம் வென்றார்.
இருவரும் தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையனை பார்த்து தங்கப்பதகத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இருவருக்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ரத்ன சபாபதி மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதேபோல் எட்டு வயத்திற்கு உட்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசந்தான் பாலன் தங்கம் வென்றார்.
இருவரும் தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையனை பார்த்து தங்கப்பதகத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இருவருக்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ரத்ன சபாபதி மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.