செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு 2019 கடினமான வருடம்: மிஸ்பா உல் ஹக்
கராச்சி போட்டியில் இலங்கையை 263 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், பாகிஸ்தானுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 கடினமான வருடம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சுமார் 10 வருடத்திற்குப்பின் இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி டிராவில் முடிந்தாலும், 2-வது போட்டியில் 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என்றாலும், பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 கடினமான வருடம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் அணி 2019-ம் ஆண்டை இலங்கை அணிக்கெதிரான மிகப்பெரிய வெற்றியோடு முடித்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு கடினமான வருடம்’’ என்றார்.
என்றாலும், பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 கடினமான வருடம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் அணி 2019-ம் ஆண்டை இலங்கை அணிக்கெதிரான மிகப்பெரிய வெற்றியோடு முடித்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு கடினமான வருடம்’’ என்றார்.