செய்திகள்
ஹனுமா விஹாரி

ஐபிஎல் ஏலத்தில் எடுக்காதது வலியை ஏற்படுத்தவில்லை என்று கூற மாட்டேன்: ஹனுமா விஹாரி

Published On 2019-12-30 12:36 GMT   |   Update On 2019-12-30 12:36 GMT
ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியாலும் ஏலம் எடுக்காதது வலிமை ஏற்படுத்தவில்லை என்று கூற மாட்டேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆன ஹனுமா விஹாரி சிறப்பான ஆட்டத்தால் தனது இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டார்.

கடந்த 19-ந்தேதி நடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஏலம் எடுக்கப்படாதது காயத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்ல முடியாது என நியூசிலாந்து தொடருக்கு தாயராகும் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஏலம் எடுக்கப்படாதது காயத்தை ஏற்படுத்தவில்லை என்று உண்மையிலேயே சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய மனநிலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முயற்சிப்பேன்.

ஆந்திரா அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய முழு மனதுடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். அதேபோல்தான் இந்தியாவுக்கும். ஆகவே, ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என்பது குறித்து உண்மையிலேயே  நான் யோசிக்கவில்லை.

ஐபிஎல் போட்டிக்கான பேட்டிங் தகுதி என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னுடைய ஆட்டத்தை நான் மாற்றமாட்டேன். ஏனென்றால் நான் எனது அணிக்காக விளையாடுகிறேன். நான் விளையாடும்போது என்னுடைய அணியை பற்றி மட்டும்தான் யோசிப்பேன். அப்படித்தான் பேட்டிங்கும் செய்வேன்’’ என்றார்.
Tags:    

Similar News