செய்திகள்
லோகேஷ் ராகுல், அனில் கும்ப்ளே

கேப்டன் பதவி மூலம் லோகேஷ் ராகுல் உச்சத்தை அடைவார்: அனில் கும்ப்ளே

Published On 2019-12-26 13:44 GMT   |   Update On 2019-12-26 13:44 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுல் உச்சத்திற்கான வளர்ச்சியை அடைவார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின், அதில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அஸ்வின் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை ஏன் கேப்டனாக நியமித்தோம் என்பது குறித்து அந்த அணியின் கிரிக்கெட் டைரக்டரான அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் ராகுல் குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘அணியை கட்டமைக்க இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும் என நான் கருதினேன். அணியில் உள்ள வீரர்களில் கேஎல் ராகுல்தான் அதற்கு சரியான நபராக இருப்பார் என தீர்மானித்தேன்.

கடந்த இரண்டு வருடமாக அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து விளையாடியிருக்கிறார். பஞ்சாப் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதித்துள்ளார். டி20-யில் அவர் எங்களுக்கு சிறந்த வீரர்.

நான் அவரை கிங்ஸ் லெவன் அணியின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை. அவருடைய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறப்பாக இருக்கும். கேப்டன் பதவியை ஏற்பதற்கு அவருக்கு இது சரியான நேரம்.

ஏனென்றால், இந்த பதவி அவரை ஒரு மனிதராக, உச்சத்தை தொடுவதற்கான வளர்ச்சி, ஒரு தலைவராக உதவியாக இருக்கும். டி20 கிரிக்கெட் மட்டுமல்ல, அனைத்து வகை கிரிக்கெட்டையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News