செய்திகள்
சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 400வது சிக்சரை அடித்துள்ளார்.
மும்பை:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா அதை சிக்சராக மாற்றினார்.
இந்த சிக்சர் மூலம் சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரோகித் சர்மா.