செய்திகள்
மெஸ்சி

யூரோ சாம்பியன்ஸ் லீக்: இன்டர் மிலான் அணிக்கெதிராக மெஸ்சிக்கு ஓய்வு

Published On 2019-12-10 08:04 GMT   |   Update On 2019-12-10 08:04 GMT
யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு கொடுத்துள்ளது பார்சிலோனா.
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பார்சிலோனா ஏற்கனவே லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர் மிலானை எதிர்கொள்கிறது. இத்தாலியில் நடைபெறும் இந்த போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு வழங்கியுள்ளது பார்சிலோனா. மேலும், ஜெரார்டு பிக்காய், செர்ஜி ரொபெர்ட்டோ ஆகியோருக்கும் ஓய்வு அளித்துள்ளது.

லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அன்சு ஃபட்டி ஆகியோர் விளையாடுகிறார்கள். ‘எஃப்’ பிரிவில் பார்சிலோனா ஐந்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்டர் மிலான், டாட்ர்மண்ட் அணிகள் தலா 7 புள்ளிகள்  பெற்றுள்ளன.
Tags:    

Similar News