செய்திகள்
யாசிர் ஷா

யாசிர் ஷா சதம், பாபர் அசாம் மிஸ்: பாகிஸ்தான் 302-ல் சுருண்டு பாலோ-ஆன்

Published On 2019-12-01 14:04 IST   |   Update On 2019-12-01 14:04:00 IST
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவாக அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முதல் முறையாக ‘டிரிபிள் செஞ்சூரி‘ அடித்தார். அவர் 335 ரன் (அவுட் இல்லை) குவித்து பிராட்மேன், மார்க் டெய்லர் சாதனையை முறியடித்தார். மார்னஸ் லாபஸ்சாக்னே 162 ரன் குவித்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முதல் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. பாபர் அசாம் 43 ரன்னுடனும், யாசிர் ஷா 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.  இதனால் பாகிஸ்தான் பாலோ-ஆனை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சதத்தை நோக்கிச் சென்ற பாபர் அசாம் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிரிஸ்பேனில் டெஸ்டில் பாபர் அசாம் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



பாபர் அசாம் அவுட்டாகும்போது பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. யாசிர் ஷா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 302 ரன்னில் சுருண்டது. ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவை விட 287 ரன்கள் பின்தங்கி பாலோ-ஆன் ஆனது. ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்க பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Similar News