செய்திகள்
மேக்ஸ்வெல்

மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய மேக்ஸ்வெல், மேடின்சன்

Published On 2019-11-25 17:34 IST   |   Update On 2019-11-25 17:34:00 IST
மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த மேக்ஸ்வெல் மற்றும் மேடின்சன் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல். கடந்த அக்டோபர் 31-ந்தேதி மனநிலை அழுத்தம் (MentAL Health Issues) காரணமாக கிரிக்கெட்டில் இருந்த சிறிது காலம் ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அதேபோல் நிக் மேடின்சன் கடந்த 9-ந்தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இருவரும் இன்று மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளனர். தற்போது விக்டோரியா பிரிமீயர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காக விளையாடினார். ஐந்து ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அவர், இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.



செயின்ட் கில்டா அணிக்காக விளையாடிய மேடின்சன் 58 ரன்கள் விளாசினார்.

Similar News