செய்திகள்
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை
டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா)- நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.