செய்திகள்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் ஹாங்காங் வீரரிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங்கைச் சேர்ந்த லீ செயுக் யியுவை
எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் லீ செயுக் யியு 21-9, 25-23 என்ற கணக்கில் கிதாம்பியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்ரீகாநத் கிதாம்பி ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினார்.