செய்திகள்
இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால், அருகில் ஜடேஜா

ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு: 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

Published On 2019-11-15 12:59 GMT   |   Update On 2019-11-15 12:59 GMT
மயங்க் அகர்வால் 243 ரன்கள் விளாசி இந்தியா ஒரேநாளில் 407 குவித்ததால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் அடித்த புஜாரா 54 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக்அவுட் ஆனார்.

ரகானே 86 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அவர் 330 ரன்களில் 28 பவுண்டரி, 8 சிக்சருடன் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.

ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.
Tags:    

Similar News