செய்திகள்
மொமினுல் ஹக்யூ

ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்

Published On 2019-11-13 15:06 GMT   |   Update On 2019-11-13 15:06 GMT
ஷாகிப் அல் ஹசன் இல்லாதது இரண்டு வீரர்களை இழந்ததற்கு சமம் என வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

ஷாகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக்யூ கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்.
Tags:    

Similar News