செய்திகள்
ரோகித் சர்மா

சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருடன் அரிய வகை சாதனையுடன் இணைந்தார் ரோகித் சர்மா

Published On 2019-11-07 13:57 GMT   |   Update On 2019-11-07 13:57 GMT
இந்திய அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகையை சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த வீரரான சுனில் கவாஸ்கர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தற்போது ஜாம்பவான்களுடன் ஹிட்மேன் ரோகித் சர்மா அரிய வகை சாதனையுடன்  இணைந்துள்ளார்.
Tags:    

Similar News