செய்திகள்
ரோகித் சர்மா

11 பேரைத் தவிர மற்ற வீரர்களை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துகிறோம்: ரோகித் சர்மா

Published On 2019-11-07 09:59 GMT   |   Update On 2019-11-07 09:59 GMT
தோல்வியடைந்தாலும், 11 பேரைத்தவிர வெளியில் இருக்கும் வீரர்களை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது. அடுத்த வருடம் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறமையை கண்காணிக்க விரும்புகிறது.

தொடர்ந்து ஒரே லெவன் அணியுடன் விளையாடாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கும் (bench strength) வாய்ப்பு கொடுக்கிறது. இதனால் நாங்கள் தோல்வியை பற்றி கவலைப்படவில்லை என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தாலும், 11 பேரைத்தவிர வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை அறிய பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News