செய்திகள்
பாயிண்ட் எடுக்க போராடும் இரு அணி வீரர்கள்

புரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது

Published On 2019-10-16 16:41 GMT   |   Update On 2019-10-16 16:41 GMT
குஜராத்தில் நடைபெற்ற புரோ கப்டி லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் யு மும்பா அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் மும்பை அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News