செய்திகள்

10 மீட்டர் ஏர் பிஸ்டல்: இந்திய வீராங்கனை மனு பாகர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்

Published On 2019-05-29 13:52 GMT   |   Update On 2019-05-29 13:52 GMT
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய வீராங்கனை மனு பாகர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ரஷியாவில் உள்ள முனிச்சில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனை மனு பாகர் நான்காவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இவருடன் தற்போது 7 முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News