செய்திகள்

‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு

Published On 2019-04-16 14:00 GMT   |   Update On 2019-04-16 14:00 GMT
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு கடுமையாக சாடியுள்ளார். #TeamIndia
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீப காலமாக அவர் சொதப்பி வந்ததால் இடம் கிடைக்கவில்லை. மேலும், விஜய் சங்கர் மூன்று பிரிவிலும் (பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில் தனக்கு இடம் கிடைக்காத விரக்தியில் அம்பதி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பை போட்டியை பார்க்க நான் புதிய செட் 3டி கண்ணாடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News