செய்திகள்

இனவெறி பேச்சு: சர்பிராஸ் அகமதுவை மன்னித்து விட்டோம்- டு பிளிசிஸ்

Published On 2019-01-25 08:15 GMT   |   Update On 2019-01-25 08:15 GMT
பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.



இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.
Tags:    

Similar News