செய்திகள்

உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி

Published On 2018-12-12 12:50 GMT   |   Update On 2018-12-12 12:50 GMT
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். #BWFWorldTour #PVSindhu
குவாங்சோவ்:

‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று தொடங்கியது. வரும் 16-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். இதே பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிவி சிந்து, அகேனா யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 24-22, 21-15 என யமாகுச்சியை வீழ்த்தினார்.

ஆண்களுக்கானா ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா, 18-21, 6-21 என நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமோட்டாவிடம் வீழ்ந்தார்.
Tags:    

Similar News