செய்திகள்

புரோ கபடி லீக் - ஜெய்ப்பூரை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது டெல்லி

Published On 2018-11-30 17:38 GMT   |   Update On 2018-11-30 17:38 GMT
புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய டெல்லி அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா தபாங் டெல்லி அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து டெல்லி அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணி நன்கு முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆனாலும் ஜெய்ப்பூர் வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

இறுதியில், தபாங் டெல்லி அணி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
Tags:    

Similar News