செய்திகள்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ்- தரவரிசை பெற்று இந்திய வீரர் பஜ்ரங் புனியா சாதனை
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரவரிசை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார். #BajrangPunia
உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட்டில் நடக்கிறது. இதுவரை இதுபோன்ற தொடர்களில் மோதும் வீரர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரநிலை வழங்கப்படும்.
ஆனால் தற்போது வீரர்களின் வெற்றித் தோல்வி ஆகியவற்றை கணக்கில் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரநிலை வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (65 கிலோ எடைப்பிரிவு) 45 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரிநிலைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். துருக்கி வீரர் செலாகட்டின் 50 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ரஷியா வீரர் பெக்புலாட்டோவ் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.
பஜ்ரங் புனியா சமீப காலமாக சிறப்பான விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது வீரர்களின் வெற்றித் தோல்வி ஆகியவற்றை கணக்கில் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரநிலை வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (65 கிலோ எடைப்பிரிவு) 45 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரிநிலைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். துருக்கி வீரர் செலாகட்டின் 50 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ரஷியா வீரர் பெக்புலாட்டோவ் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.
பஜ்ரங் புனியா சமீப காலமாக சிறப்பான விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.