செய்திகள்

சீனா ஓபன் பேட்மிண்டன்- தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2018-09-20 09:13 GMT   |   Update On 2018-09-20 09:13 GMT
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பம்ரங்பனை எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் தாய்லாந்து வீராங்கனை 23-21 என முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 21-13 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.



வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை பிவி சிந்துவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் பிவி சிந்து 21-18 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News