செய்திகள்

ஆசிய கோப்பை 2018- ஷாகிப் அல் ஹசனைத் தொடர்ந்து தமிம் இக்பாலுக்கும் காயம்

Published On 2018-09-07 14:23 GMT   |   Update On 2018-09-07 14:23 GMT
ஆசிய கோப்பைக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளதால், அந்த அணிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. #AsiaCup2018
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஷாகிப் அல் ஹசன் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் எப்படியும் குணமடைந்து விடுவார் என்று வங்காள தேச கிரிக்கெட் அணி நம்பிக்கையில் இருந்தது.



ஆனால் தான் 20 முதல் 30 சதவிகிதம் உடற்தகுதி மட்டுமே பெற்றுள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்தார். இதனால் வங்காள தேச அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் தமிம் இக்பாலின் வலது கை விரலில் முறிவு ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. ஒரே நேரத்தில் முக்கியமான இரண்டு வீரர்கள் காயத்திற்குள்ளானதால் வங்காள தேச அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News