செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி - வெண்கலப் பதக்கம் வென்றது ஆண்கள் ஸ்குவாஷ் அணி

Published On 2018-08-31 11:46 GMT   |   Update On 2018-08-31 11:46 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. #AsianGames2018 #IndianSquashTeam
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஹாங் காங் அணியை எதிர்கொண்டது.

சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் சந்து, ரமித் தாண்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 0-2 என்ற கணக்கில் ஹாங் காங் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால், மூன்றாம் இடம் பிடித்த இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

முன்னதாக பெண்கள் ஸ்குவாஷ் அணி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #IndianSquashTeam
Tags:    

Similar News