செய்திகள்

2-வது டி20 கிரிக்கெட்- இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2018-07-06 21:44 IST   |   Update On 2018-07-06 21:44:00 IST
இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 9.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்குப் பதிலாக ஜேக் பால் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுதான் முதல் டி20 போட்டியாகும். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News