செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்டி பிளவர்

Published On 2018-05-30 23:59 GMT   |   Update On 2018-05-30 23:59 GMT
உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். #WivsWXI

துபாய்: 

கரீபியன் தீவுகளில் கடந்த ஆண்டு கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இதற்கான உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆண்டி பிளவர் கூறுகையில்,‘ உலக லெவன் அனிக்காக விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக எல்லா அணி வீரர்களும் ஒரே இடத்தில் இருக்கும் போது, பல அனுபவங்கள் கிடைக்கும். இந்த முறை மிகவும் அரிய நிகழ்வாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது சிறப்பான விஷயம்.’ என அவர் கூறினார்.



உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. அப்ரிடி (கேப்டன்), 2. சாம் பில்லிங்ஸ், 3. தமிம் இக்பால், 4. தினேஷ் கார்த்திக், 5. ரஷித் கான், 6. சந்தீப் லாமிச்சேன், 7 மெக்கிளேனகன், 8. சோயிப் மாலிக், 9. திசாரா பெரேரா, 10, லூக் ரோஞ்சி, 11. அடில் ரஷித், 12. முகமது ஷமி. #WivsWXI
Tags:    

Similar News