செய்திகள்

இத்தாலி ஓபன்- நடால், மரின் சிலிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2018-05-18 15:31 GMT   |   Update On 2018-05-18 15:31 GMT
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். #ItalianOpen #Nadal
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஒன்றில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் இத்தாலியின் பபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார்.

சொந்த நாட்டில் விளையாடிய ஃபோக்னினி ரபெல் நடாலுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டில் ஃபோக்னினி சிறப்பாக விளையாடி 6-4 என வெற்றி பெற்றார். ஆனால், நடால் அடுத்த இரண்டு செட்டுகளை 6-1, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.



மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச் ஸ்பெயினின் பப்லோ கர்ரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் மரின் சிலிச் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச் - நிஷிகோரி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Tags:    

Similar News