செய்திகள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

Published On 2017-06-23 23:47 GMT   |   Update On 2017-06-23 23:47 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 38 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
ட்ரினிடாட்:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.



இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ஓவரில் 132 ரன்கள் சேர்த்தனர். ரகானே 62 ரன்னிலும், தவான் 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் களம் இறங்கினார்கள். யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News