செய்திகள்

டோனியின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ராகுல் திரிபாதி

Published On 2017-05-20 12:34 GMT   |   Update On 2017-05-20 12:34 GMT
டோனியின் வழிகாட்டுதலின் கீழ் கற்றுக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி கூறியுள்ளார்.
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள இளம் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி. புனே அணி தொடக்கத்தில் ரகானே, மயங் அகர்வால் ஆகிய தொடக்க வீரர்களுடன் களம் இறங்கியது. முதல் மூன்று போட்டிகளில் மயங் அகர்வால் சோபிக்காததால், திரிபாதி தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

புனே அணிக்காக 388 ரன்கள் குவித்துள்ள திரிபாதி, சர்வதேச வீரர்களான டோனி, ரகானே, ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் போன்றோர்களுடன் விளையாடியது கனவு அனுபவம் போன்று உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து திரிபாதி கூறுகையில் ‘‘புனே அணியில் இடம்பிடித்து விளையாடுவது, எனக்கு கனவு அனுபவம்போல் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடனும், எதிர்த்தும் விளையாடுவது த்ரில்லாக உள்ளது.



டோனி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி மேற்கொண்டு கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது வரை புனே அணியில் என்னுடைய பயணம் மகிழ்ச்சியாக உள்ளது. இதே உணர்வோடு இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என்னவென்றால், தோல்வியடைந்த போட்டியில் இருந்து கற்றுக் கொண்டு அதை அடுத்த போட்டியில் செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இதனால், சில சமயம் நம்முடைய தோல்விகள், வெற்றிக்கான படிக்கல்லாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News