செய்திகள்
தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு கொல்கத்தா ரசிகர்களிடம் காம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று குவாலிபையர்-2 சுற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்காது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருந்தாலும் அது அணியை வெற்றி பெற செய்வதற்கு போதுமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்காது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருந்தாலும் அது அணியை வெற்றி பெற செய்வதற்கு போதுமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.