செய்திகள்

ஐ.பி.எல்.லில் குறைந்த வயதில் சதம்: 2-வது வீரர் சாம்சன்

Published On 2017-04-12 07:36 GMT   |   Update On 2017-04-12 07:36 GMT
10-வது ஐ.பி.எல். போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 63 பந்தில் 102 ரன் எடுத்தார். இதன்மூலம் குறைந்த வயதில் ஐ.பி.எல்.லில் சதம் அடித்த வீரர்களில் அவர் 2-வது இடத்தை பிடித்தார்.
இந்த ஐ.பி.எல். போட்டியில் முதல் சதம் அடித்தவர் என்ற சாதனையை டெல்லி அணி வீரர் சாம்சன் பெற்றார். அவர் 63 பந்தில் 102 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

சாம்சன் தனது 22 வயது 151 நாட்களில் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த வயதில் ஐ.பி.எல்.லில் சதம் அடித்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். மனிஷ் பாண்டே 19 வயது 253 நாட்களில் சதம் அடித்து இருந்தார். குயின்டன் டிகாக் (தென்னாப்பிரிக்கா) 23 வயது 122 நாட்களிலும், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 23 வயது 153 நாட்களிலும் சதம் அடித்து இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் சதம் அடித்த 28-வது வீரர் சாம்சன் ஆவார். மொத்தம் 43 சதம் பதிவாகி உள்ளது.



இந்தியர்களில் 12-வது வீரர் சாம்சன் ஆவார். விராட் கோலி (4 சதம்), ஷேவாக், முரளி விஜய் (தலா 2 செஞ்சூரி), தெண்டுல்கர், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், வல்தாட்டி, ரகானே, ரோகித் சர்மா, ரெய்னா, விருத்திமான் சகா ஆகிய இந்திய வீரர்கள் இதற்கு முன்பு ஐ.பி.எல்.லில் சதம் அடித்து இருந்தனர்.

Similar News