செய்திகள்
விராட் கோலியின் ஆக்ரோஷம் அஸ்வினை ஒட்டிக் கொண்டது: எரபள்ளி பிரசன்னா
விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அஸ்வின் தொடர்ந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற உதவும் வகையில் அவரையும் ஒட்டிக் கொண்டது என்று முன்னாள் சுழற்பந்து வீசசாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 19 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. இதற்கு அஸ்வினின் சுழற்பந்து வீச்சு முதுகெலும்பாக உள்ளது. அவர் கடைசி 9 போட்டிகளில் 61 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம்தான் அஸ்வின் விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கு உதவுகிறது என்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார்
மேலும் இதுகுறித்து எரபள்ளி பிரசன்னா கூறுகையில் ‘‘அஸ்வின் சிறப்பாக பந்து வீச விராட் கோலிதான் முக்கிய காரணம். கோலியின் ஆக்ரோஷம் அவரையும் ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு போட்டிக்கும் அவர் உற்சாகப்படுத்துகிறார். அஸ்வின் மேட்ச் வின்னராக உள்ளார். ஆனால், விராட் கோலியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு வீரரும் சிறப்பான வீரராக உருவாக முடியும்.
சாதனை சிகரத்தில மெதுவாக ஏறிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னும் வருடங்கள் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் பல வருடங்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருநாள் அவர் வார்னே மற்றும் முரளீதரன் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடிப்பார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம்தான் அஸ்வின் விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கு உதவுகிறது என்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார்
மேலும் இதுகுறித்து எரபள்ளி பிரசன்னா கூறுகையில் ‘‘அஸ்வின் சிறப்பாக பந்து வீச விராட் கோலிதான் முக்கிய காரணம். கோலியின் ஆக்ரோஷம் அவரையும் ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு போட்டிக்கும் அவர் உற்சாகப்படுத்துகிறார். அஸ்வின் மேட்ச் வின்னராக உள்ளார். ஆனால், விராட் கோலியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு வீரரும் சிறப்பான வீரராக உருவாக முடியும்.
சாதனை சிகரத்தில மெதுவாக ஏறிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னும் வருடங்கள் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் பல வருடங்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருநாள் அவர் வார்னே மற்றும் முரளீதரன் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடிப்பார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.