செய்திகள்

வங்காள தேசத்திற்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2017-02-12 09:50 GMT   |   Update On 2017-02-12 09:50 GMT
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காள தேச அணிக்கு 459 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள இந்தியா.
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்தது. விராட் கோலி (204), முரளி விஜய் (108), சகா (106 அவுட் இல்லை) சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் 388 ரன்கள் சேர்த்தது. இந்தியாவை விட 299 ரன்கள் பின்தங்கியிருந்தது. அந்த அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 127 ரன்கள் குவித்தார்.

299 ரன்கள் முன்னிலைப்  பெற்றாலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா அவுட்டாகாமல் 54 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 459 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 459 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Similar News