செய்திகள்

இந்தியாவின் பேட்டிங் கோலியை மட்டும் நம்பி இருக்கவில்லை: பென் ஸ்டோக்ஸ்

Published On 2016-12-19 12:02 IST   |   Update On 2016-12-19 12:02:00 IST
இந்தியாவின் பேட்டிங் விராட் கோலியை மட்டுமே நம்பி இருக்கவில்லை என்று இங்கிலாந்து வீர்ர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி மிகப்பெரிய ரன்களை குவித்துவிடுகிறது. விராட் கோலி 15 ரன்னில் துரதிருஷ்டவசமாக ஆட்டம் இழந்த போதிலும் இந்தியா ரன்களை குவித்துவிட்டது.

விராட் கோலியை மட்டுமே நம்பி இந்தியாவின் பேட்டிங் இல்லை என்பது புரிந்துவிட்டது. லோகேஷ் ராகுலின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 199 ரன்னில் ஆட்டம் இழப்பார் என்று நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News