செய்திகள்

காயத்தால் ஹர்திக் பாண்டியா அவதி: 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வலியுறுத்தல்

Published On 2016-11-29 09:46 GMT   |   Update On 2016-11-29 09:46 GMT
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முதன்முறையாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஆனால், ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியா தற்போது மொகாலி டெஸ்டில் விளையாடி வருகிறது.

அப்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குறித்து ஸ்கேன் செய்ததில் சிறிய அளவில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதனால் அவர் 6 மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி மாதம் 15-ந்தேதி தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

Similar News