செய்திகள்

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது

Published On 2016-11-18 07:35 GMT   |   Update On 2016-11-18 07:35 GMT
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 167 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 351 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்திருந்தது. அஸ்வின் 47 ரன்களுடனும், ஜயந்த் ஜாதவ் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின் ஆட்டம் தொடங்கியது. மொயீன் அலி வீசிய 121-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அஸ்வின் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 58 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். ஜயந்த் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆக இந்தியா 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

கடைசி விக்கெட்டாக உமேஷ் யாதவ் 13 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷமி 7 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், ரஷித் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இந்தியா 2-வது நாளான இன்று 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News