செய்திகள்
மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்
ரியோ ஒலிம்பிக்கில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசேன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணிக்கு நடந்தது.
இதில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட், யோகன் பிளேக் (ஜமைக்கா), ஜஸ்டின் கேட்லின், புரோ மெல் (அமெரிக்கா) பென் யூசுப்மெட்டி (ஐவேரி கோஸ்ட்), ஆந்த்ரே டி கிராஸ் (கனடா), ஜிம்மி விகாட் (பிரான்ஸ்), அகானி சிபின் (தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 பேர் அரை இறுதி மூலம் தகுதி பெற்று இருந்தனர்.
இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறே உசேன் போல்ட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உசேன் போல்ட்டுக்கு கேட்லின் சவால் கொடுத்தார். போல்ட்டை விட அவரே முன்னிலையில் இருந்தார்.
இதனால் கேட்லின் வெற்றி பெற்று விடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி 15 மீட்டரில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓட்டத்தில் அனல் பறந்தது. அவர் மிகவும் வேகமாக ஓடி கேட்லினை ஓரம் கட்டினார்.
அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவை சேர்ந்த ஆந்த்ரே கிராஸ் 9.91 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரர் என்பதை உசேன் போல்ட் நிரூபித்து உள்ளார். பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும், லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் சாம்பியன் ஆகி இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உசேன் போல்ட் நீடிக்கிறார். அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. கேட்லின், யோகன் பிளேக் ஆகியோர் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உசேன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்துக்கு முன்பு அவர்களால் தாக்கு பிடிக்க இயலவில்லை. இதில் பிளேக் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடியில் கடந்து உசேன் போல்ட்டுக்கு இந்த சீசனில் சிறந்த நிலையாகும். 2009-ம் ஆண்டு அவர் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. ஒலிம்பிக் சாதனையாளராகவும் உசேன் போல்ட்தான் உள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணிக்கு நடந்தது.
இதில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட், யோகன் பிளேக் (ஜமைக்கா), ஜஸ்டின் கேட்லின், புரோ மெல் (அமெரிக்கா) பென் யூசுப்மெட்டி (ஐவேரி கோஸ்ட்), ஆந்த்ரே டி கிராஸ் (கனடா), ஜிம்மி விகாட் (பிரான்ஸ்), அகானி சிபின் (தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 பேர் அரை இறுதி மூலம் தகுதி பெற்று இருந்தனர்.
இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறே உசேன் போல்ட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உசேன் போல்ட்டுக்கு கேட்லின் சவால் கொடுத்தார். போல்ட்டை விட அவரே முன்னிலையில் இருந்தார்.
இதனால் கேட்லின் வெற்றி பெற்று விடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி 15 மீட்டரில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓட்டத்தில் அனல் பறந்தது. அவர் மிகவும் வேகமாக ஓடி கேட்லினை ஓரம் கட்டினார்.
அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவை சேர்ந்த ஆந்த்ரே கிராஸ் 9.91 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரர் என்பதை உசேன் போல்ட் நிரூபித்து உள்ளார். பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும், லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் சாம்பியன் ஆகி இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உசேன் போல்ட் நீடிக்கிறார். அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. கேட்லின், யோகன் பிளேக் ஆகியோர் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உசேன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்துக்கு முன்பு அவர்களால் தாக்கு பிடிக்க இயலவில்லை. இதில் பிளேக் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடியில் கடந்து உசேன் போல்ட்டுக்கு இந்த சீசனில் சிறந்த நிலையாகும். 2009-ம் ஆண்டு அவர் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. ஒலிம்பிக் சாதனையாளராகவும் உசேன் போல்ட்தான் உள்ளார்.