இந்தியா

VIDEO: ரெயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து காதல்.. மயிரிழையில் உயிர் தப்பிய Love birds

Published On 2025-12-03 00:21 IST   |   Update On 2025-12-03 00:21:00 IST
  • சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்தனர்.
  • சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

காதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்த ஜோடி மயிரிழையில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

அவர்கள் காதலில் மூழ்கியிருந்தபோது அதுவரை நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி சுயநினைவுக்கு திரும்பி, தண்டவாளத்தில் இருந்து தவழ்ந்துசென்று விலகி தங்கள் உயிரை காத்துக் கொண்டனர்.

அவர்கள் விலகிய சில நிமிடங்களில், ரெயில் முன்னோக்கி நகர்ந்து சென்றது. ஒரு கணம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உயிர் பறிபோயிருக்கும்.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். இது எங்கு எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாவில்லை. எனினும் வீடியோ படு வைரலாகி வருகிறது.  

Tags:    

Similar News