இந்தியா

திருச்சூரில் குடிபோதை தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற வாலிபர்

Published On 2025-04-25 16:51 IST   |   Update On 2025-04-25 16:51:00 IST
  • அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொரட்டிகட்டில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விஷ்ணு (வயது32), யது கிருஷ்ணன் (29). சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்துள்ளனர்.

அப்போது குடிபோதையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு நடந்துள்ளது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, யது கிருஷ்ணனின் தலையில் ஆயுதத்தால் அடித்தார்.

இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுக்காடு போலீசார், சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு யது கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிந்தனர்.

தம்பியை அடித்துக் கொன்ற விஷ்ணுவை தேடினர். மோதலில் காயமடைந்ததால் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே யது கிருஷ்ணனை விஷ்ணு கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News