இந்தியா
காசி விஸ்வநாதருக்கு தேசிய கொடி வண்ணத்தில் சிறப்பு அலங்காரம்
- டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.
- சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
லக்னோ:
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் காசி விஸ்வநாதருக்கு தீப ஆராதனை நடந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.