இந்தியா

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதற்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு

Published On 2023-02-01 10:21 GMT   |   Update On 2023-02-01 10:21 GMT
  • கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
  • 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

திருப்பதி:

கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தலைமைச் செயலகம் கட்டுப்பணி நடைபெற்று வந்தது.

அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.

வரும் மார்ச் மாதம் 3 அல்லது 4 தேதியில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில பொறுப்பாளர் அச்சம் நாயுடு கூறுகையில்:-

கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஒரே தலைநகரம் அமராவதி என தேர்தல் நேரத்தில் பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது விசாகப்பட்டினம் தலைநகரம் என அறிவித்து நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மாநிலத்தை பிரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News