இந்தியா
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
- கடந்த ஒரு ஆண்டுகளாக மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறார்.
- சைனுதீன் இருந்த பள்ளிக்கு செல்ல மாணவி மறுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மன்னார்காடு காஞ்சராம்புழா பகுதியை சேர்ந்தவர் சைனுதீன்(வயது50). மதப்பள்ளி ஆசிரியரான இவர், அந்த பள்ளிக்கு வந்த 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சைனுதீன் இருந்த பள்ளிக்கு செல்ல மாணவி மறுத்திருக்கிறார். அதுபற்றி விசாரித்தபோதே, மாணவியை சைனுதீன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சைனுதீனை கைது செய்தனர்.