இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நியமனம்

Published On 2022-06-21 10:52 GMT   |   Update On 2022-06-21 10:57 GMT
  • ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
  • டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

பின்னர், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமன் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News