இந்தியா

ஆந்திராவில் திருநங்கையை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 13 பேர் கும்பல்

Published On 2022-07-22 06:22 GMT   |   Update On 2022-07-22 06:22 GMT
  • ஆந்திராவில் காரில் வந்த 13 பேர் திருநங்கையை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சம்பவம் குறித்து புலி வெந்துலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புலி வெந்துலா நகர் பகுதியை சேர்ந்தவர் 50 வயது திருநங்கை. இவர் அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து சாலை ஓரங்களில் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்து பிழைத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கதிரி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளிடம் திருநங்கை பணம் வசூல் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே காரில் 13 பேர் வந்தனர். அவர்கள் திருநங்கையிடம் பணம் கொடுப்பதாக கூறி காரில் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இதனால் திருநங்கை மயக்கம் அடைந்தார். இதையடுத்து திருநங்கையை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் காரில் தப்பிச் சென்றனர்.

மயக்கம் தெளிந்த திருநங்கை இது குறித்து புலி வெந்துலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருநங்கையை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News