இந்தியா

காஷ்மீர் பனியில் ஜாலியாக கிரிக்கெட்டிய விளையாடிய மத்திய அமைச்சர்

Published On 2023-02-10 10:16 GMT   |   Update On 2023-02-10 10:16 GMT
  • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
  • அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரீநகர்:

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 10-ந்தேதி வரை கடும் பனிப்பொழிவு நிலவும் குல்பர்கில் நடைபெறுகிறது.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக போட்டிகளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.

அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News