இந்தியா

டயபரில் மறைத்து தங்கம் கடத்தல்

Published On 2023-03-18 08:31 GMT   |   Update On 2023-03-18 08:31 GMT
  • கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
  • குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தையை வாங்கி பரிசோதித்தனர். அப்போது குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

Similar News