இந்தியா

அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் கைகளில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை

Published On 2022-07-11 05:10 GMT   |   Update On 2022-07-11 06:10 GMT
  • அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் கைகளில் இருந்து கைக்குழந்தை தவறி கீழே விழுந்தது.
  • படுகாயம் அடைந்த குழந்தையை உடனே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை, காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷீலா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

நேற்று அந்த குழந்தையை ஆஸ்பத்திரி நர்சு, கைகளில் எடுத்து வந்தார். அப்போது தவறுதலாக குழந்தை அவரது கைகளில் இருந்து கீழே விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. படுகாயம் அடைந்த குழந்தையை உடனே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News